உள்ளூர் செய்திகள்

வேளாண் இடுபொருள் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2023-09-08 09:35 GMT   |   Update On 2023-09-08 09:35 GMT
  • கல்விக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
  • பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதைகடை வைக்கலாம்.

கிருஷ்ணகிரி, 

பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் அனிஷாராணி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலை தூரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், செப் 2-ம் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்த பட்டயப் படிப்பு ஒரு ஆண்டு, இரண்டு பருவங்கள் ஆகும். கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

தமிழ்வழிக் கல்வியில் இப்பாடங்களுக்கு நேர்முக பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதைகடை மற்றும் தாவர மருந்துவ மையம் வைக்கலாம். மேலும் இடுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை யாளராகலாம். சுய வேலை வாய்ப்பு பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 

Tags:    

Similar News