உள்ளூர் செய்திகள்

பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பேக்கரியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-11-03 09:04 GMT   |   Update On 2023-11-03 09:04 GMT
  • உணவு, இனிப்பு பொருட்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டு க்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்உள்ள உணவகங்கள் மற்றும் இனிப்பகங்கள் உள்ளி ட்ட கடைகளுக்கு தஞ்சை மாவட்ட உணவுபாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர்.

இதில் தீபாவளிபண்டிகைக்கு தயாராகி வரும் இனிப்புகள் தரமானதாக உள்ளதா எனவும் அத்தோடு அதில் தயாரிப்பு மற்றும் காலாவதி யாகும் தேதிகள் கட்டாயம் குறிப்பிடப்பட்டு ள்ளதா எனவும் ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்ட பத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் இனிப்பாக உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவு மற்றும் இனிப்பாக உரிமை யாளர்களிடத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகள் மற்றும் சில விதிமுறைகள் வழங்கினர்.

பின்னர் தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா செய்தி யாளர்களிடத்தில் கூறுகை யில், ஒவ்வொரு இனிப்பு பொருட்களிலும் தயாரிப்பு தேதி மற்றும் அதன் காலாவதி தேதியை கட்டாயம்குறிப்பிட வேண்டும்.

இந்த நடை முறையை கட்டாயம் அனைத்து ஹோட்டல் மற்றும் இனிப்பக உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொது மக்களுக்கு தரமான, பாதுகாப்பான உணவு மற்றும் இனிப்புகளை வழங்க முடியும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஹோட்டல்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் வெங்கடேசன் செயலாளர் அன்பு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News