உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

Published On 2023-08-22 15:23 IST   |   Update On 2023-08-22 15:23:00 IST
  • இரு அணை களில் இருந்து தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
  • நேற்று மாலை 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி அதே அளவு நீடித்து வந்தது.

]ஒகேனக்கல்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ். கபினி அணை களுக்கு நீர்வரத்து அதி கரித்தது.

இதனால்அந்த இரு அணை களில் இருந்து தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று மாலை 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி அதே அளவு நீடித்து வந்தது.

ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரண மாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவிகளில் தண்ணீர் விழு வதை பார்த்து ரசித்தனர். மேலும் மெயின் அருவி, சீனி அருவி ஆகிய அருவி களில் குளித்தும் மகிழ்ந்த னர்.

இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்ற னர்.

பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள தால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 7-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

Tags:    

Similar News