உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக சரிவு

Published On 2023-08-30 15:55 IST   |   Update On 2023-08-30 15:55:00 IST
  • இந்த தண்ணீர் பிலிக் குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகே–னக்கலுக்கு வந்தடைந்தது.
  • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், இன்று காலை 8 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

ஒகேனக்கல்,  

கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பெய்த பருவமழை காரணமாக கர்நா டகாவில் உள்ள கபினி, கேர்.ஆர்.எஸ். ஆகிய அணை களில் நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பிலிக்குண்டுலு வழியாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 20 ஆயிரம் கனஅடியாக வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருவ தால், காவிரி ஆற்றில் நீர்வ ரத்து அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்–பட்டது. இந்நி லையில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீ–ரின் அளவு 5 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இந்த தண்ணீர் பிலிக் குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகே–னக்கலுக்கு வந்தடைந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற் றுக்கு வரும் நீர்வரத்து நேற்று முன்தினம் 6 ஆயிரம் கன அடியாக இருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், இன்று காலை 8 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. கர்நாடகா அணைகளில் இருந்து 5 ஆயிரம் கனஅடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தமிழ கத்திற்கு வரும் தண்ணீரின் அளவை பிலிக்குண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வ ளத்துறை அதிகாரிகள் கண்கா ணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News