உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்.

இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-14 10:03 GMT   |   Update On 2023-09-14 10:03 GMT
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதன்படி நாகை மாவட்டத்தில் 2 வது நாளாக திருக்குவளை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்குவளை கடைத்தெருவில் இருந்து மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் பேரணியாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து திருக்குவளை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், இந்தியாவில் அதிகரிக்கும் வேலை தட்டுப்பாட்டை கண்டித்தும், இந்தி திணிப்புக்கு எதிராகவும், சொந்த லாபங்களுக்கு நாட்டை தனியார்மயமாக்கும் செயலுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News