உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி தேசியகொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மயிலாடுதுறையில், சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

Published On 2023-08-15 10:06 GMT   |   Update On 2023-08-15 10:06 GMT
  • போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.
  • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் உள்ள ராஜன்தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் மகாபாரதி தேசியகொடியை ஏற்றி வைத்தார். பின்னர், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளும், அவரது குடும்பத்தினரும் கவுரவிக்கப்பட்டனர். பின்னர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags:    

Similar News