உள்ளூர் செய்திகள்

அமைச்சர் இ.பெரியசாமி

வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

Published On 2022-07-01 15:27 GMT   |   Update On 2022-07-01 15:27 GMT
  • சங்கங்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப 23% வரை ஊதியம் அதிகரிப்பு.
  • ஊதிய உயர்வால், 1675 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் .இ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் 01.01.2020 ந் தேதியில் இருந்த சம்பள உயர்வு குறித்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு அவர்களுக்கான 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் ஊதிய உயர்வின தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 01.01.2020 முதல் ஊதிய உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

சங்கங்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப 23% வரை ஊதியம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வினால் பணியாளர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.2,259/-ம், அதிகபட்சமாக ரூ.14815/-ம் ஊதிய உயர்வு கிடைக்கும்.

இவற்றின் மூலம் வேளாண்மை உற்பதியாளர்கள் கூட்டுறவு விற்பறைச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் 1675 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News