உள்ளூர் செய்திகள்

தொழிலாளர்களுக்கு பென்சன் தொகை உயர்வு: முதலமைச்சருக்கு நிலத்தரகர்கள் சங்கம் பாராட்டு

Published On 2023-11-04 09:59 GMT   |   Update On 2023-11-04 09:59 GMT
  • பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரி தொழிலாளர்களும் சங்கத்தின் சார்பிலும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.
  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் மற்றும் கட்டுமான அமைப்பு மாநில தலைவருமான வி.என். கண்ணன் மற்றும் அமைப்பாளர் எழில் சம்பத் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.1000 பென்சன் தொகை வழங்கப்பட்டு வந்தது.

இந்த பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரி தொழிலாளர்களும் சங்கத்தின் சார்பிலும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.

இந்நிலையில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பென்சன் தொகையை ரூ.1000த்தில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொழிலாளர்கள் நலனின் கருத்தில் கொண்டு பென்சன் தொகையை உயர்த்தி வழங்கிய இந்தியா போற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

Tags:    

Similar News