உள்ளூர் செய்திகள்

வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

திருக்காட்டுப்பள்ளியில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் திறப்பு

Published On 2023-09-06 10:10 GMT   |   Update On 2023-09-06 10:10 GMT
  • பூதலூர் ஒன்றியத்தில் ரூ.92.79 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
  • ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.

பூதலூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் ரூ.92.79 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், திருக்காட்டு ப்பள்ளி மற்றும் அகரப்பே ட்டையில் ரூ.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம், கூடநாணல் கிராமத்தில் ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை அலுவலக கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன் மற்றும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News