உள்ளூர் செய்திகள்

உத்தமர்குடியில் புதிய அங்காடி கட்டிடத்தை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

உத்தமர்குடியில், புதிய பொது வினியோக கட்டிடம் திறப்பு

Published On 2023-05-25 09:33 GMT   |   Update On 2023-05-25 09:33 GMT
  • ரூ.14 லட்சத்தில் புதிய பொது விநியோக கட்டிடம் கட்டப்பட்டது.
  • அத்தியாவசிய பொருட்களை வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அருந்தபுரம் ஊராட்சி உத்தமர்குடியில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சத்தில் புதியதாக பொதுவிநியோக கட்டிடம் கட்டப்பட்டு பொது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமை வகித்தார்.

ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ண பிரியா விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

அருந்தவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாஆசை த்தம்பி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதியதாக கட்டப்பட்ட பொதுவிநியோக கட்டிடத்தை திறந்து வைத்து அத்தியாவசிய பொருள்களை வழங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹமதுரிபாயி,

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, அருந்தபுரம் கூட்டுறவு சங்க செயலாளர் வரதராஜன், ஊராட்சி செயலாளர் காமராஜ், ஊராட்சி சங்க நிர்வாகிகள் ஜெகத்குரு, மாரிமுத்து மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News