உள்ளூர் செய்திகள்

ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

ஏற்காட்டில் யானைக்கால் நோய் பரிசோதனை முகாம்

Published On 2022-11-08 08:59 GMT   |   Update On 2022-11-08 08:59 GMT
  • பொது சுகாதாரத்துறை சார்பாக யானைக்கால் நோய் ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  • வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு ஜெரினாகாடு பகுதியில் பொது சுகாதாரத்துறை சார்பாக யானைக்கால் நோய் ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. வட்டார சுகாதார அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார். இரவு நேரங்களில் மட்டுமே இந்நோய்க்கான தாக்கம் ரத்தத்தில் தெரியும் என்பதால், இரவு நேரத்தில் இந்த முகாம் நடைபெற்றது.

ஜெரினாகாடு பகுதியில் உள்ள அனைத்து கிரா மங்களுக்கும் சென்று சுகாதாரத்துறையினர் பரிசோ தனை மேற்கொண்டனர். இதில் அந்தந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் செல்வகுமார் இம்முகா மிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags:    

Similar News