உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விருத்தாசலத்தில்: பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்த அதிகாரிகள்

Published On 2022-07-03 10:14 GMT   |   Update On 2022-07-03 10:14 GMT
  • விருத்தாசலத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் விருத்தாசலம் பைபாஸ் சாலையில் உள்ள சார்பதிவாளர் அருகில் உள்ள தனியார் இடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 419 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டன. இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி வாகனங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது.

மேலும்பள்ளி வாக னஓட்டுனர்கள் வாகன ங்களை இயக்கும்போது கவனமாகவும், பள்ளி மாணவர்கள் இறங்கு ம்போதும் ஏறும் போதும் சரியாக கவனி த்து வாகனங்களை இய க்குமாறும் அறிவுரைகளை மோட்டார் வாகன அதிகாரிகள் வழங்கினர். இதில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், விருத்தாச்சலம் காவல் கோட்ட கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News