உள்ளூர் செய்திகள்

வாடகை செலுத்தாத கடைக்கு அதிகாரிகள் சீல் வைக்க சென்றனர்.

வேளாங்கண்ணியில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'

Published On 2023-03-08 06:56 GMT   |   Update On 2023-03-08 06:56 GMT
  • காய்கறி, மளிகை கடைகள் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்தன.
  • பேரூராட்சி மூலம் வாடகை செலுத்தக்கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்ப்ட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், கடைகள் மற்றும் மீன் மற்றும் பல்பொருள் அங்காடியில் உள்ள காய்கறி, மளிகை கடைகளுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்த குத்தகைதாரர்களுக்கு பேரூராட்சி மூலம் வாடகை செலுத்த கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.

ஆனால் இது நாள் வரை வாடகை செலுத்தாத 15 கடைகளை காவல் துறை, வருவாய் துறையின் முன்னிலையில் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி ஊழியர்களால் கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News