உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தது.

வேதாரண்யத்தில், மருத்துவ முகாம்

Published On 2023-06-12 14:56 IST   |   Update On 2023-06-12 14:56:00 IST
  • தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சியில் மக்களுக்கான தூய்மை இயக்கம் சார்பில் தூய்மை பணியாளருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு டாக்டர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். 

Tags:    

Similar News