உள்ளூர் செய்திகள்

வாசுதேவநல்லூரில் மயக்க மருந்து தெளித்து பெண்ணிடம் நகை பறிப்பு-மேலும் 2 பெண்களிடம் கைவரிசை

Published On 2022-07-08 09:05 GMT   |   Update On 2022-07-08 09:05 GMT
  • பேச்சியம்மாள் நேற்று இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு பீடிசுற்றி கொண்டிருந்தார்.
  • நகைபறித்து சென்ற மர்மநபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமியம்மாள் (வயது75). ராமராஜ் மனைவி சண்முகவடிவு (60).

கோவில் திருவிழா

இவர்கள் சிந்தாமணிநகரில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கூட்டநெரிசலை பயன்படுத்தி லெட்சுமியம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மற்றும் சண்முகவடிவு கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

இது தொடர்பாக அவர்கள் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயக்க மருந்து

வாசுதேவநல்லூர் சேனையர்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பேச்சியம்மாள் (28). இவர் நேற்று இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு பீடிசுற்றி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர் அவரது முகத்தில் மயக்கமருந்து தெளித்து அவரிடம் இருந்த 2½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி பேச்சியம்மாளிடம் நகைபறித்து சென்ற மர்மநபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News