உள்ளூர் செய்திகள்

வடவள்ளியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2022-08-21 09:58 GMT   |   Update On 2022-08-21 09:58 GMT
  • இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
  • ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

கோவை:

கோவை வடவள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (29). இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

இந்தநிலையில் செல்வம் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தடாகம் அடுத்த பன்னிமடையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (26). பெயிண்டர். இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்தநிலையில் சந்தோஷ்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

மேலும் அவரது காலில் காயம் ஏற்பட்டு ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவரது மனைவி வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறி கண்டித்தார்.

இதனால் அவர் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News