உள்ளூர் செய்திகள்

வடலூரில் நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறிப்புவாலிபர் கைது

Published On 2023-02-25 09:45 GMT   |   Update On 2023-02-25 09:45 GMT
  • வாலிபர் ஒருவர் முதியோர் உதவித்தொகைக்கான, பணம் வாங்கி தருவதாக கூறி நகை அணிந்து இருந்தால் உதவித்தொகை கிடைக்காது என்று கூறி நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி சென்றுவிட்டார்,
  • .சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று ஒப்ப டைத்தனர்.

கடலூர்:

வடலூர் அருகே தென்குத்து புதுநகர் காலனி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தன் மனைவி விருத்தாம்பாள் (70) கோவிந்தன் இறந்து விட்டார்.மூதாட்டி விருதாம்பாள் வீட்டில் தனியாக இருந்த போதுவாலிபர் ஒருவர் வந்தார். அவர் முதியோர் உதவித்தொகைக்கான, பணம் வாங்கி தருவதாக கூறி நகை அணிந்து இருந்தால் உதவித்தொகை கிடைக்காது என்று கூறி அவர் அணிந்திருந்த ஒரு ஜோடி தங்க மூக்குத்தியை கழட்டி கொடுங்கள் என ஒரு வெள்ளை பேப்பரில் மடித்து கொடுக்கின்றேன்.

அதை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள் என வாங்கியுள்ளார். அந்த வாலிபர் நகையை பாக்கெட்டில் வைத்து கொண்டு அந்த பேப்பரில் 2சிறிய கற்களை வைத்து மடித்துக் கொடுத்துவிட்டு அதிகாரிகளை அழைத்து வருகின்றேன் என்று தான் வந்த இருசக்கர வாகனத்தில் சென்று விட்டார்.அவர் சென்ற பிறகு மூதாட்டி வீட்டின் உள்ளே சென்று பேப்பரை பிரித்து பார்த்துள்ளார். அதில் நகைகளுக்கு பதில் கற்கள் இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்து உடனடி யாக திருடன் திருடன் என கூச்சலிட்டார்.சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று ஒப்ப டைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் அவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்ட நல்லூர் வடக்கு தெரு சாமிதுரை மகன் சரத்குமார்( 27 )என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News