திருச்சியில் அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடிகள் கைது அரிவாள்,கார் பறிமுதல்
- அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடிகள்
- திருச்சியில் கைது
- அரிவாள்,கார் பறிமுதல்
திருச்சி,
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 39 ). வெங்காய வியாபாரி. இவர் சென்னை பைபாஸ் சாலையில் அப்போலோ ஹாஸ்பிடல் எதிர் புறத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம நபர் இவரிடம் அரிவாள் முனையில் பணத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த பிரவீன் என்கிற அருண்பால்( 37) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து அரிவாள், பணம் ,கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் திருச்சி பாலக்கரை காஜா பேட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற விக்னேஷ் ராஜா என்வரிடம் கத்தி முனையில் பணத்தை பறித்ததாக பாலக்கரை காஜா பேட்டையைச் சேர்ந்த சந்துரு, மதன் ,அசோக் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சந்துரு, மதன் ஆகிய 2 பேரும் ரவுடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.