உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் நடிகர் சசிக்குமார் ரசிகர்கள் முன்பு பேசினார்.

அயோத்தி திரைப்படத்தில் மனிதம்தான் முக்கியம் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது- நடிகர் சசிக்குமார் பேட்டி

Published On 2023-03-08 08:48 GMT   |   Update On 2023-03-08 08:48 GMT
  • நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
  • துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார்.

தஞ்சாவூர்:

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் நந்தன் என்கிற புதிய திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொள்ள வந்த நடிகர் சசிக்குமார் அயோத்தி திரைப்படத்தை திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் பேசும் போது, சாதி மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற விஷயம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்.

அதைத்தான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது, இந்த படத்தின் கதை அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விசயம் தான்.

இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார்.

இது போல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார். எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்த விஷயம் .

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் துரை சுதாகர், திரையரங்க நிர்வாகிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News