உள்ளூர் செய்திகள்
காமன்தொட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதா ந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதா ந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அட்டகுறுக்கி, காமன் தொட்டி, சீபுரி கொட்டாய், கோபசந்திரம், ஜோதி நகர், காவேரி நகர், மு.தின்னூர், பண்ணப் பள்ளி, ரவுத்தப் பள்ளி, பாரதிபுரம், யு.கொத்தூர், தும்மை ப்பள்ளி, உஸ்தலப்பள்ளி, தாசனபுரம், தோரிப்பள்ளி, கல்லு குறுக்கி, கொத்த கோட்டா, அட்ட குறுக்கி, ஒட்டர் பாளையம், குக்கலப் பள்ளி, சுப்புகிரி, கான லட்டி, கோனோப் பள்ளி, பிள்ளை கொத்தூர், பாத்த கோட்டா, ராமாபுரம், ஆழியாளம் ஆகிய பகுதி களிலும் அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.