உள்ளூர் செய்திகள்

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்.

தஞ்சையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு காத்திருப்பு போராட்டம்

Published On 2023-10-18 09:58 GMT   |   Update On 2023-10-18 09:58 GMT
  • பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி மதில் சுவர் கட்ட வேண்டும்.
  • மாத்தூர் ஆதிதிராவிடர் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் மாத்தூர் கிழக்கில் உள்ள ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதாகியதால் இடிக்கப்பட்டு ஓராண்டாகியும் கட்டுமான பணி தொடங்கப்படாமல் உள்ளது.

எனவே போர்க்கால அடிப்படையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி மதில் சுவர் கட்ட வேண்டும்.

இடுகாடு, சாலை, எரியூட்டும் மேடை, மதில் சுவர், அடிபம்பு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தஞ்சை தாலுகா அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதற்கு ஒன்றிய செயலாளர் அபிமன்னன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு உறுப்பினர் அமுல்ராஜ், கிளை செயலாளர்கள் சரிதா, மலர்விழி, ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் தொடக்கி வைத்தார் .

மாநகர செயலாளர் வடிவேலன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், சங்கிலி முத்து, வன ரோஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News