உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்
- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
தஞ்சாவூர்:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறை ப்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தஞ்சை ரெயிலடியில் இருந்து புதுஆற்றுப்பாலம் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
இதற்கு போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜா, சத்யசீலன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.