உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சையில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2023-03-29 10:05 GMT   |   Update On 2023-03-29 10:05 GMT
  • மாற்றுதிறனாளிகள் குறைகளை மனுவாக எழுதி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
  • அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் தலைமை வகித்தார்.

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுதிறனாளிகள் குறைகளை மனுவாக எழுதி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாற்று திறனாளிகள் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News