உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்.

தகட்டூரில், பொதுமக்கள் 'திடீர்' சாலை மறியல்- பரபரப்பு

Published On 2023-09-01 08:17 GMT   |   Update On 2023-09-01 08:17 GMT
  • பள்ளி மாணவன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
  • குற்றவாளியை கண்டுபிடிக்கக்கோரி மாணவனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன். இவரது மகன் தர்ஷன் (வயது 12). இவர் தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை மாணவன் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக சாலையை கடக்கும் போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வாய்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குற்றவாளியை கண்டு பிடிக்கக்கோரி உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் இன்று காலை திடீரென தகட்டூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News