உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாநில அளவிலான ஊசூ விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினார்.

மாநில அளவிலான ஊசூ விளையாட்டு போட்டியில்,சாதனை படைத்த மாணவர்களுக்கு - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

Published On 2023-04-26 10:20 GMT   |   Update On 2023-04-26 10:20 GMT
  • கோவையில் மாநில அளவிலான ஊசூ விளை யாட்டு போட்டி நடை பெற்றது.
  • கடலூர் உள்ளிட்ட 32 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளை யாடினார்கள்

கடலூர்:

கோவையில் மாநில அளவிலான ஊசூ விளை யாட்டு போட்டி நடை பெற்றது. இதில்   கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராமிடம் சாதனை படைத்த மாணவர்கள் நேரில் சென்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்தை காண்பித்தனர்.

அப்போது அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். அப்போது பயிற்சியாளர்கள் தேவதாஸ், வெற்றிச் செல்வன், பாரதிராஜா மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News