உள்ளூர் செய்திகள்

சேலத்தில் பூ வியாபாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை

Published On 2022-09-12 09:25 GMT   |   Update On 2022-09-12 09:25 GMT
  • இரவு வீட்டைப் பூட்டி விட்டு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றார்.
  • பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி0 பகுதியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் மனைவி லதா (வயது 45), பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டைப் பூட்டி விட்டு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது

6 பவுன் நகை, 80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அன்ன தானப்பட்டி போலீசில் லதா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News