உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்.

பட்டுக்கோட்டையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்

Published On 2023-11-07 10:21 GMT   |   Update On 2023-11-07 10:21 GMT
  • கும்மி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக 100 நாள் வேலைத்திட்ட பணியில் ஈடுபடும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் மூன்று மாத காலமாக நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கும்மி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செல்வம் மற்றும் நீலமேகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களை எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News