உள்ளூர் செய்திகள்

கொள்ளையர்களை படத்தில் காணலாம்.

பண்ருட்டியில்:பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைதுகொள்ளை கும்பல் தலைவனுக்கு வலைவீச்சு

Published On 2023-11-06 08:47 GMT   |   Update On 2023-11-06 08:47 GMT
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் செங்க ல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகில் உள்ள பொத்தேரி சிறுவாச்சூர் என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல், வேளாங்கண்ணி, நதியா ஆகியோர்கள் என தெரிய வந்தது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு பகல் நேரத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 2 பெண் மற்றும் 3 ஆண்கள் சேர்ந்து தங்க நகைகளை திருடி சென்றது சம்பந்தமாக பண்ருட்டி நகர போலீஸ் நிலையதில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளைய ர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா மேற்பா ர்வையில் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கண்ணன்,சப்-இன்ஸ்பெ க்டர்க ள்தங்கவேல், பிரசன்னா ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டு சி.சி.டி.வி . காமிரா காட்சி மற்றும் சைபர் கிரைம் ஏட்டுகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் இந்த கொள்சளை ம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் செங்க ல்பட்டு மாவட்டம் மறைம லைநகர் அருகில் உள்ள பொத்தேரி சிறுவாச்சூர் என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல், வேளாங்கண்ணி, நதியா ஆகியோர்கள்என தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து வேறொரு கொள்ளை வழக்கில் சிதம்பரத்தில் கைதாகிகடலூர் மத்திய சிறையில் இருந்தஇவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பண்ருட்டியில்வக்கீல் ஒரு வீட்டில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 5 லட்ச ரூபாய் பணம் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.தலைவ ராக உள்ளஇவர்க ளது கூட்டாளிஒருவனிடம் பணம் உள்ளது என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பணத்துடன் தலைமறை வாகியுள்ளகூட்டாளியை பொறிவைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News