உள்ளூர் செய்திகள்
நெய்வேலியில் கழுத்தை அறுத்து என்.எல்.சி. தொழிலாளி கொலை?
- நெய்வேலியில் கழுத்தை அறுத்து என்.எல்.சி. தொழிலாளி இறந்து கடந்தார்.
- வீட்டின் கதவு வழியாக ரத்தம் வந்ததை அறிந்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தனர்.
கடலூர்:
நெய்வேலி புதுநகர்4-வது வட்டம் புண்ணாக்கு தெருவில் வசித்தவர் சண்முகம் . இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் காண்ட்ராக்ட் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட்டார்.இன்று காலை சுமார் எட்டு மணி அளவில் வீட்டின் கதவு வழியாக ரத்தம் வந்ததை அறிந்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த நிலையில் கழுத்து அறுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சண்முகம் பிணமாக கிடந்தார். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். யாராவது சண்முகத்தை கொலை செய்தார்களா? தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.