உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில்மே 5-ந் தேதி கடைகளுக்கு விடுமுறை

Published On 2023-04-27 07:25 GMT   |   Update On 2023-04-27 07:25 GMT
  • நகராட்சி கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் மாணிக்கம் தலைமை நடைபெற்றது.
  • சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் மாணிக்கம் தலைமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.

வருகிற 5-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநில மாநாட்டில் நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களுடைய கடைகளுக்கு விடுமுறை அளித்து குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

மாநாட்டில் மாவட்ட தலைவர் வெள்ளையனுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயலாளர் கருணாகரன், கவுரவ தலைவர் சேரன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News