உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2022-08-02 09:58 GMT   |   Update On 2022-08-02 09:58 GMT
  • தீராத வயிற்று வலியால் அருண்குமார் அவதிப்பட்டு வந்தார்.
  • கடந்த 25-ந்தேதி விஷம் குடித்துவிட்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் திட்டம்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் அருண்குமார் (வயது 24).

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அருண்குமார் இதில் மனமுடைந்து கடந்த 25-ந்தேதி விஷம் குடித்துவிட்டார்.

மயங்கி கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Tags:    

Similar News