உள்ளூர் செய்திகள்

மனித உரிமைகள் தின உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரியில் மனித உரிமைகள் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Published On 2022-12-11 09:30 GMT   |   Update On 2022-12-11 09:30 GMT
  • மனித உரிமைகள் தின உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
  • அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மனித உரிமைகள் தினத்தையொட்டி மாவட்டவருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான வந்தனாகார்க் ஆகியோர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன் தாட்கோ மேலாளர் யுவராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால், மாவட்ட கலெக்டர் அலுவலகமேலாளர் (நீதியியல்) வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News