கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
- கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
- வங்கி மேலாளர்கள் பயனா ளிகளின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி,
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பால முருகன் தலைமை தாங்கி பேசும் போது, இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி பிரிவிற்கு அதிகபட்சமாக, 50 லட்சம் ரூபாய் மற்றும் சேவை பிரிவிற்கு, 20 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், அதிகப்பட்ச மாக 35 சதவீதம் மானியத்து டன் கூடிய வங்கிக் கடன் பெற்று தொழில் துவங்கி பயன டையலாம் என்றார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன் பேசுகையில், வங்கி மேலாளர்கள் பயனா ளிகளின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் (தொழில்நுட்பம்) ராமமூர்த்தி, பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். இந்த முகாமில் வங்கிகளின் பிரதிநிதி கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.