உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பெண் போலீசிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்

Published On 2022-10-26 07:35 GMT   |   Update On 2022-10-26 07:35 GMT
  • ரஞ்சித் குமார் என்பவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.
  • மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மகள் சவிதா இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (32) என்பவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியதாக கூறப்ப டுகிறது. சவிதா என்பவர் ரஞ்சித்குமாருக்கு ஏற்கனவே ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் ரூ.2 லட்சம் ஆக மொத்தம் 6 லட்சத்து 80 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று துருகம் சாலையில் பஞ்சர் கடை அருகே சவிதா வந்து கொண்டிருந்தார். அப்போது ரஞ்சித்குமார் வழிமறித்து ரூ.30 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்டு அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூற ப்படுகிறது. இதுகுறித்து சவிதா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News