உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெஞ்ச் டெஸ்ட் வழங்கும் நிகழ்ச்சியில் பொன். கவுதமசிகாமணி எம்.பி பேசினார். 

கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச்- டெஸ்க் பொன். கவுதமசிகாமணி எம்.பி. வழங்கினார்

Published On 2022-07-16 14:11 IST   |   Update On 2022-07-16 14:11:00 IST
  • கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச்- டெஸ்க் பொன். கவுதமசிகாமணி எம்.பி. வழங்கினார்.
  • அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் தேவை என நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ள க்குறிச்சி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, நெடுமானூர் அரசு மேல்நிலை ப்பள்ளி, சங்க ராபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் தேவை என நாடாளுமன்ற உறுப்பி னரிடம் கோரிக்கை விடுத்தனர். அ த ன்படி நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெஞ்ச், டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ள க்குறிச்சி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி தலைமை தாங்கினார்.

மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தாகபிள்ளை, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அப்துல் கலீல், செயலாளர் கிரி ராசு ஆகியோர் முன்னிலை வைத்தனர். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கள்ள க்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி கலந்து கொண்டு ஒவ்வொரு பள்ளிக்கும் 50 பெஞ்ச், டெஸ்க் வீதம் 4 பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் 200 பெஞ்ச், டெஸ்க் வழங்கினார். இதில் மாவட்ட தொ.மு.ச. துணைத் தலைவர் அன்பழகன், துணைச் செயலாளர் திராவிட மணி, வார்டு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கற்பகம் நன்றி கூறினார்

Tags:    

Similar News