உள்ளூர் செய்திகள்

கடத்தூரில் அ.தி.மு.க பிரசார வாகனத்திற்கு வரவேற்பு

Published On 2023-08-13 15:08 IST   |   Update On 2023-08-13 15:09:00 IST
  • வாகனத்தை முன்னாள் முதல் -அமைச்சர் அ.தி.மு.க பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
  • பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர் ஒன்றியத்திற்க்கு வருகை தந்த நிலையில் எம்.எல்.ஏ கோவிந்தசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடத்தூர், 

மதுரையில் நடைபெறும் நூற்றாண்டு பொன்விழா மாநாடு வரும் 20-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.

இதை அடுத்து பிரச்சார வாகனத்தை முன்னாள் முதல் -அமைச்சர் அ.தி.மு.க பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த பிரச்சார வாகனம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர் ஒன்றியத்திற்க்கு வருகை தந்த நிலையில் எம்.எல்.ஏ கோவிந்தசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய துணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் சக்திவேல், கடத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சபியுல்லா, பொம்மிடி டோமினிக், அம்பேத், கட்டை முருகன், மாதன், சுரேஸ், மடத்தை தருமன், செண்ண கிருஷ்ணன், மாஸ்டர் முருகன், செந்தில், மாணிக்கம், மாது உள்ளிட்டிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Similar News