உள்ளூர் செய்திகள்
ஓசூர் ஜீவா நகரில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள்
- 20 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.
- பிரகாஷ் எம்.எல்.ஏ-மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சிக்கு 38-வது வார்டுக்குப்பட்ட ஜீவா நகர் பகுதியில் சுமார் 20 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் வெங்கட்ர மணப்பா, மண்டலத் தலைவர் ஜெயபிரகாஷ், கவுன்சிலர்கள் முரு கம்மாள் மதன், லட்சுமி ஹேமந்த்குமார், மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.