உள்ளூர் செய்திகள்

ஓசூர் பகுதியில்புதிதாக தார் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

Published On 2023-01-05 15:26 IST   |   Update On 2023-01-05 15:26:00 IST
  • தார்சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
  • ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

ஓசூர், 

ஓசூர் மாநகராட்சி 17-வது வார்டு பகுதியில், சிப்காட் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 கோடி மதிப்பில் சிப்காட் லால் ரோடு மற்றும் சிப்காட் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி பகுதியில் புதிதாக தார்சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இதில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜா என்ற நாகராஜ், மண்டல குழு தலைவர்கள் ரவி, காந்திமதி கண்ணன், சிப்காட் திட்ட அலுவலர் வெங்கடாசலம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News