கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், கரட்டூர் வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
கிருத்திகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
- பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் சாமிக்கு வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் சாமிக்கு வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிர மணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சாமி, பொத்தனூர் அருகே உள்ள பச்சைமலை முருகன், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், வேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன்,
அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், சக்தி நகரில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி யாண்டவர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.
இதில் அந்தந்த சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர் களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.