விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு மறியல்- பரபரப்பு
- கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முன்பு மறியல் நடந்தது.
- விபத்தில் இறந்தவர் உடலை தர தாமதமானதாக உறவினர்கள் புகார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கார்வேபுரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த முரளி (35), ஹரீஷ் (32) ஆகியோர் நேற்று முன்தினம் காரில் தருமபுரி - கிருஷ்ணகிரி சாலையில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார் அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் மேம்பாலத்தில் வந்தபோது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் மோதியது.
இதில் முரளி, ஹரீஷ் 2 பேரும் பலியானார்கள். அவர்களின் உடல் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் வரையில் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படாததை கண்டித்து உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் மற்றும் டவுன் போலீசார் விபத்தில் பலியானவர்களின் உறவி னர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பிரேத பரிசோதனை செய்வதற்கு முன்பாக தயாரிக்க வேண்டிய ஆவணங்கள் காவல் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு மருத்துவமனையிடம் வழங்கி, பிரேத பரிசோதனை செய்து உடல்கள் விரைவில் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்த தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.