உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி முதியவர் உள்பட 2 பேர் சாவு

Published On 2023-08-09 15:38 IST   |   Update On 2023-08-09 15:38:00 IST
  • இவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார்.
  • பட்டாளம்மன்கோவில் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேன்கனிக்கோட்டை,  

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (73). கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார். இந்த நிலையில் இவர் கடந்த 3-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். அப்போது பட்டாளம்மன்கோவில் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அங்கீட்புனியா (28) என்பவர் ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது தெரிகிறது. இந்த நிலையில் அங்கீட்புனியா கடந்த 6-ந் தேதி அதேபகுதியில் நடந்து சென்றபோது அங்கு தரைமட்டமான நீர்தேக்கதொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News