உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் ரூ.27.19 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

Published On 2023-04-25 10:32 GMT   |   Update On 2023-04-25 10:32 GMT
  • 5,499 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
  • மொத்தம் ரூ.27 லட்சத்து 19 ஆயிரத்து 321-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

தருமபுரி,

தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று 5,499 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.600-க்கும், குறைந்தபட்சமாக ரூ.320-க்கும், சராசரியாக ரூ.494.48-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.27 லட்சத்து 19 ஆயிரத்து 321-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News