உள்ளூர் செய்திகள்

கடலூரில் சிறுவனிடம் 50 ரூபாய் பணம் கேட்டு தாக்கிய வாலிபர் கைது

Published On 2022-09-19 13:26 IST   |   Update On 2022-09-19 13:26:00 IST
  • சீனிவாசன் (வயது 21) என்பவர் நடந்து சென்ற சிறுவனிடம் 50 ரூபாய் பணம் கேட்டு உள்ளார்.
  • சிறுவன் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த சீனிவாசன் சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

கடலூர்:

கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 21) என்பவர் நடந்து சென்ற சிறுவனிடம் 50 ரூபாய் பணம் கேட்டு உள்ளார்.

அப்போது சிறுவன் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த சீனிவாசன் சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

Tags:    

Similar News