உள்ளூர் செய்திகள்
ஆடிப்பெருக்கைெயாட்டி ஒரே நாளில் மேட்டூர் அணை பூங்காவை 20 ஆயிரத்து 197 பேர் பார்வையிட்டனர்
- அனுமதிக்கப்பட்ட இடங்களில் காவிரியில் நீராடிய அவர்கள் பின்னர் அணை பூங்காவையும் சுற்றி பார்த்தனர்.
- பவள விழா கோபுரத்தில் இருந்து அணையை 2 ஆயிரத்து 64 பேரும் பார்வையிட்டனர். இதன் மூலம் ஒரே நாளில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 305 ரூபாய் வசூலாகி உள்ளது.
சேலம்:
ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து மேட்டூருக்கு ஏராளமானோர் வந்தனர்.
அங்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் காவிரியில் நீராடிய அவர்கள் பின்னர் அணை பூங்காவையும் சுற்றி பார்த்தனர். தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை குடும்பத்துடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். குழந்தைகள் அங்கு ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர்.
மேட்டூர் அணை பூங்காைவ நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 197 பேரும், பவள விழா கோபுரத்தில் இருந்து அணையை 2 ஆயிரத்து 64 பேரும் பார்வையிட்டனர். இதன் மூலம் ஒரே நாளில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 305 ரூபாய் வசூலாகி உள்ளது.