உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக கட்சியினர்.

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் ஐ.ஜே.கே. ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-13 09:43 GMT   |   Update On 2023-10-13 09:43 GMT
  • சம்பா, தாளடி சாகுபடிக்கான உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
  • தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்:

காவிரி ஒழுங்காற்று ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து தலைமை வகித்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், பூதலூர் ஒன்றிய செயலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில போராட்ட குழு செயலாளரும், தஞ்சை மேற்கு மாவட்ட தலைவருமான சிமியோன் சேவியர்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட துரித நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

சம்பா, தாளடி சாகுபடிக்கான உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்புகளை கைகளில் ஏந்தியப்படி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில துணைத்தலைவர்கள் நெல்லை ஜீவா, அனந்தமுருகன், காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் பழ.இராசேந்திரன், சாமி.கரிகாலன், இராசு.முனியாண்டி, வைகறை, இந்திய ஜனநாயக கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வினோபா, மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டீபன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முத்துராஜன், தெற்கு மாவட்ட தலைவர் பச்சமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் .

முடிவில் மாவட்ட பொருளாளர் முத்துகிரு ஷ்ணன் நன்றி கூறினார்

Tags:    

Similar News