உள்ளூர் செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே ஐ.ஜி. மகனுக்கு அபராதம் விதித்த இன்ஸ்பெக்டர்

Published On 2022-08-22 08:58 GMT   |   Update On 2022-08-22 08:58 GMT
  • பச்சைவா ழியம்மன் கோவில்அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

விழுப்புரம்:

உத்தரபிரதேசத்தில் ஐ.ஜி.,யாக உள்ளவரின் 18வயதுமகன்விழுப்புரம் மாவட்டம்கோட்டக்கு ப்பத்தில்இருந்து, பெரிய முதலியார் சாவடியை நோக்கி ஸ்கூட்டி யில் வந்தார். அப்போது, கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், பச்சைவா ழியம்மன் கோவில்அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். உடனே அந்த சிறுவன் ஓட்டி வந்த ஸ்கூட்டியை நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்லை என கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் நான் எனது அப்பா ஐ.ஜி., என கூறியுள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர் ராபின்சன்யாராக இரு ந்தால் என்ன எனக் கூறி மொபைல் போனில் பேசியதாகவும், ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டியை ஓட்டியதாகவும், 2 வழக்கு கள் பதிந்து 200 ரூபாய் அபராதம் விதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இ ன்ஸ்பெக்டரிடம் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்று ள்ளது.

Tags:    

Similar News