உள்ளூர் செய்திகள்

பெங்களூருவில் இருந்து வால்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்த ஐ.டி. ஊழியர் பலி

Published On 2023-08-26 14:50 IST   |   Update On 2023-08-26 14:50:00 IST
  • மோட்டார் சைக்கிள் டிராக்டரின் பின் பக்கத்தில் மோதி அஸ்வால் தூக்கி வீசப்பட்டார்.
  • சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அஸ்வால் (வயது26). இவர் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

அஸ்வால் அவரது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வருவதற்கு திட்டமிட்டார். அதன்படி கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் அஸ்வால் பெங்களூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் அஸ்வால் வேகமாக சென்றார். மோட்டார் சைக்கிள் பல்லடம்-பொள்ளாச்சி ரோட்டில் தனியார் கல்லூரி அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற டிராக்டரின் பின் பக்கத்தில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த அவரை அவரது நண்பர்கள் மீட்டு கோவை சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்ைச பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அஸ்வால் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News