உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்த குறிஞ்சிப்பாடி மாணவி மாயம்

Published On 2023-10-15 08:49 GMT   |   Update On 2023-10-15 08:49 GMT
  • ரேவதி பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாட மியில் படித்து வந்தார்.
  • இரவு வெகுநேரமாகியும் ரேவதி வீடு திரும்பவில்லை.

கடலூர்:

குறிஞ்சிப்பாடியை அடுத்த மதனகோபால புரத்தில் உள்ள கோ.சத்தி ரத்தை சேர்ந்தவர் பழனி மகள் ரேவதி (வயது 22). இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாட மியில் படித்து வந்தார். ரேவதியின் உறவினர், மோட்டார் சைக்கிளில் அழைத்துவந்து பண்ருட்டி யில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று காலை விட்டுச் சென்றார். இரவு வெகுநேரமாகியும் ரேவதி வீடு திரும்பவில்லை.

அவரது பெற்றோர் ரேவதியை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ரேவதியின் பெற்றோர் பண்ருட்டி போலீ சாரிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன மாணவி யை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News