உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
ஆண்டிபட்டியில் மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை
மனைவி இறந்த மன வேதனையில் இருந்த சின்னச்சாமி சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே உள்ள அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 77). இவரது மனைவி லிங்கம்மாள். கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்ேபாது முதல் மன வேதனையில் இருந்த சின்னச்சாமி சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மகன் முத்துச்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.