உள்ளூர் செய்திகள்

ஓசூரில் 50 ஏக்கர் நிலமோசடி வழக்கில் கணவன் மனைவி கைது

Published On 2023-03-31 10:04 GMT   |   Update On 2023-03-31 10:04 GMT
  • கணவன் மனைவி இருவருக்கும் 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
  • நீதிபதி விசாரணைக்கு பின், கணவன்-மனைவி இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசரெட்டி, முனிரெட்டி ஆகிய இருவருடைய 50 ஏக்கர் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த ராஜாரெட்டி, அவரது மனைவி ரத்தினம்மாள் பெயரில் கடந்த 2006-ம் ஆண்டு ஆள் மாறாட்டம் செய்து நிலத்தை பதிவு செய்து அபகரித்தாக கூறப்படுகிறது.

இது குறித்து சீனிவாசரெட்டி மத்திகிரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஓசூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் விசாரணை நடந்ததில், கடந்த 2010 - ம் வருடம் கணவன் மனைவி இருவருக்கும் 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு குறித்து ராஜா ரெட்டி குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். 2018-ம் ஆண்டு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.

இதனை தொடர்ந்து மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கடந்த 21.11.2022 அன்று ஆண்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

தீர்ப்புக்கு பின் ராஜாரெட்டி அவரது மனைவி ரத்தினம்மாள் ஆகிய இருவரும் தலைமறைவானதாக தெரிகிறது.

இவர்களை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர்களை, மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி கைது செய்து ஓசூர் (ஜே.எம் 2-ல்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

நீதிபதி விசாரணைக்கு பின், கணவன்-மனைவி இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோடிக்கணக்கான மதிப்புடைய, 50 ஏக்கர் சொத்து க்களை அபகரிக்க முயன்ற கணவன், மனைவி கைது செய்யப்பட்டசம்பவம், ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News